Tuesday, May 26, 2009

காதல் ஏமாற்றம்!

பாசியில்லாப் பாறையடி நான்!
பண் இல்லாப் பாடலாக்கி விட்டாயே! 
 
சிலை வடிக்கும் உளி - நீ என்று எண்ணி 
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் !
 
சிகை இல்லாமல் என்னை சிதைத்துவிட்டு 
சிறு பிள்ளை போல் சிரிப்பதேன்!  

உன் செயலைக்கண்டு வெதும்பாமல் 
உன் நகை கண்டு நெகிழுதடி என் மனம்!  

புரிந்து கொள்ளடி பெண்ணே! 
உன்னிடத்தில் நான் இழந்த இதயம் இறந்து விட்டதென்று!

Friday, May 15, 2009

நண்பனே- மறக்காதே

சிறகுகள் விரியும் நேரம்!
கனவுகள் கலையும் காலம்.

சிறகடித்து பறக்க! - இல்லை
சிறகடித்து பிரிய மறுக்கும் மனங்கள்.

பரந்த வானில் பறக்க போகிறோம்
இந்த சில இனிய நினைவுகளை
இதயத்தில் தாங்கிக்கொண்டு.

மறந்து விடாதே நண்பா!
பேசும் ஊமையாய் சொல்கிறது என் உள்ளம்.

No of Visitors

Followers