பண் இல்லாப் பாடலாக்கி விட்டாயே! 
சிலை வடிக்கும் உளி - நீ என்று எண்ணி 
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் !
சிகை இல்லாமல் என்னை சிதைத்துவிட்டு 
சிறு பிள்ளை போல் சிரிப்பதேன்!  
உன் செயலைக்கண்டு வெதும்பாமல் 
உன் நகை கண்டு நெகிழுதடி என் மனம்!  
புரிந்து கொள்ளடி பெண்ணே! 
உன்னிடத்தில் நான் இழந்த இதயம் இறந்து விட்டதென்று!
 
